Thursday, 20 November 2014

'நாகரிகத்தின் தொட்டில்' நாகை மாவட்டம்- கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்


'நாகரிகத்தின் தொட்டில்' நாகை மாவட்டம்- கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்




தொன்மை சிறப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் இம்மண்ணில் இன்னமும் விரவிக் கிடக்கிறது.

குத்தாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப் பட்ட புதிய கற்கால ஆயுதமான கற் கோடரி சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சிறிதும் குறைந்ததில்லை. காவிரிக் கரை நாகரிகம் என்பதை உலகுக்கு உரத்துச் சொன்னது அது. பூம்புகாரின் எச்சங்களும், தலைச்சங்காடு அகழாய்வும் எல்லா நாகரிக வளர்ச்சியின்போதும் இங்கேயும் அதற்கு சற்றும் குறையாத வளர்ச்சி அதே விகிதத்தில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சிவப்பு நிற ஓவியம்

அந்த சான்றுகளுக்கு இன்னமும் அதிக வலுசேர்க்கும் விதமாக சீர்காழி அருகே யுள்ள எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் கிடைக்கும் விதவிதமான முதுமக்கள் தாழிகள் உள்ளன எனலாம். அளவுகளில் வேறுபட்டதாக காலத் தால் மாறுபட்டதாக விதவிதமாக கிடைக்கும் முதுமக்கள் தாழிகளில் இருந்து கத்தி, ஈட்டி, உணவுக்கலங்கள், விளக்குகள், கல்மணிகள், வெண்கல கிண்ணம் என்று பல்வகை பொருட்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், தற் போது கிடைத்திருக்கும் ஒரு மட்கல யத்தில் காணப்பட்ட சிவப்பு நிற ஓவியம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியக்க வைக்கும் தொழில்நுட்பம்

பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டிருக்கும் அந்த மட்கலயம் புவியீர்ப்பு விசையைச் சமாளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. தஞ்சா வூர் தலையாட்டி பொம்மை போல அந்த மட்கலயத்தை எப்படி ஆட்டி விட்டாலும் கீழே விழாமல் ஆடி, திரும்பவும் நேராக நின்றுவிடும் அதன் தொழில்நுட்பம் வியக்கத் தக்கதாய் இருக்கிறது.

ஆனால், அதையும்விட அதிக வியப்புக்குரியதாகவும், ஆச்சர்யத்துக் குரியதாகவும் அமையக் கூடியது அந்த மட்கலயத்தில் உள்ள ஓவியம்.

பெருங்கற்கால சூலம்…

இதை கண்டறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறும் போது, “இந்த மட்கலயத்தில் பெருங் கற்கால சூலம் போன்ற குறியீடு காணப் படுகிறது. இதுபோன்ற குறியீடுகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத் திருக்கிறது என்றாலும் அதைவிட சிறப் பான இன்னொரு ஆச்சர்யமும் இந்த மட்கலயத்தில் இருக்கிறது. அது ஒரு ஓவியம். சிவப்பு நிறத்தில் கிளைக ளோடு கூடிய ஒரு மரம் அந்த ஓவியத் தில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அதற் கான விளக்கம் ஆராயப்பட வேண்டிய அதேநேரத்தில் இன்னொரு விஷயத் தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

அவர்கள் வாழ்ந்த அந்த கால கட் டத்தில் சிவப்பு நிறம் என்பது மங்கள கரமான காரியங்களை உணர்த்தும் விதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.

ஆனால், இங்கோ இறந்தவர் களை, இறக்கப் போகிறவர்களை வைக்கும் அமங்களகரமான தாழியில் வைத்த மட்கலயத்தில் எப்படி சிவப்பு நிறத்தை குறித்தார்கள் என்பதுதான் மிகப்பெரிய விவாதத்துக்குரியது. சிவப்பு நிறத்திலான இந்த ஓவியம் தமிழகத்தில் இதுவரை வேறு எங்கும் கிடைக்கவில்லை” என்கிறார்.

வேறுபடுத்திக் காட்டுவதற்கு…

சென்னையைச் சேர்ந்த கலை வர லாற்று ஆய்வாளர் காந்திராஜன் இது குறித்து விளக்குகிறார்: “தங்கள் கூட்டத்தின் தலைவனையோ அல்லது மதத் தலைவனையோ மற்றவர்களிடமி ருந்து வேறுபடுத்திக் காட்ட இப்படி சிவப்பு நிற குறியீட்டைப் பயன் படுத்தியிருக்கலாம்.

மண்ணில் சிவப்பு நிற குறியீடு வரைந்து பிறகு அதை சுட்டிருக்கிறார் கள். இந்த பகுதியில் கிடைக்கும் தாழி கள், வெண்கல கிண்ணங்கள், வட்டில் களைப் பார்த்தால் இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்க ளைக் கற்றுப் பயன்படுத்தியிருக்கிறார் கள் என்பது தெரிகிறது” என்கிறார்.

இப்படி அடுக்கடுக்காய் ஆதாரங் கள் கிடைத்தாலும் இன்னமும் அந்த பகுதியில் தொல்பொருள் துறையின் கவனம் திரும்பவில்லை. பொக்கிஷங் களைப் போற்றி பாதுகாப்பதில் இங்கு யாருக்கும் அக்கறையில்லை என்பதுதான் வேதனை.


3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மேட்டூர் அணையில் பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு





மேட்டூர் அணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை இரவு நேரங்களில் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டங்களில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கின்றது.

தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், ராஜன், அர்ஜுனன் ஆகியோர் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது (தர்மபுரி மாவட்ட பகுதி) 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும், கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாண்டவன் திட்டு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்திட்டை மிகவும் பழமையானது ஆகும். தமிழகப் பெருங்கற்கால நினைவு சின்னங்களுள் குறிப்பிடத்தக்க இடத்தை பெறக்கூடிய ஒன்றாகும். இந்த கற்திட்டையின் மூடுகல் மட்டும் சுமார் 80 டன் எடை கொண்டதாக இருக்கும் என்பது இதன் பிரமாண்டத்தை காட்டுவதாகும். அதுமட்டுமல்லாமல் இக்கற்திட்டையின் இடுதுளை கிழக்கு பக்கம் உள்ளது. அரை வட்ட வடிவில் இருப்பது இதன் பழமையை காட்டுகிறது.

ஆய்வின் ஒரு பகுதியாக மலையனூர் திட்டு என்னுமிடத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கல்வட்டத்தின் நடுவே ஈமப்பதுக்கை இருப்பதும் அறியப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒரு டன் எடையுள்ள கற்களால் இக்கல்வட்டம் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இடுதுளை ஒன்று இருந்திருக்கும் என்று யூகம் செய்ய மட்டுமே முடிகிறது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர் வற்றும் சமயங்களில் வெளியே தெரியும் நந்தியும், வீரபத்திரன் கோயிலும் சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. சர்ச் கோபுரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவை. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்கால நாகரீகத்தை சேர்ந்த இந்த ஈமச்சின்னங்கள் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

புதையல் வேட்டையாளர்களும், அரியபொருள் திருடர்களும், பேராசைக்காரர்களும் தங்களது அறியாமையால் இரவில் குழி தோண்டி இச்சின்னங்களை சூறையாடி வருகின்றனர். இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)


சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)


சிந்துவெளி மற்றும் அரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”



நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.